நாகர்கோவில் ஜூலை 10
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் இரயில்நிலைய சந்திப்பு வளாகத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் –ல் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்பட உள்ளது என மதுரை ஆர் எம் எஸ் கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :- வரும் 11.07.2024 முதல் நாகர்கோவில் ஆர்.எம்.எஸ் – இல் ஆதார் சேவை மையம் இயங்கும்.
புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம்/மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கவும் ரூ.50/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை ஆர்.எம்.எஸ் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



