கிருஷ்ணகிரி,ஜுலை.28- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்னோகெள்ளு ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செந்தில்குமார், குருபரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன்,பிமான்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், குப்பாச்சி பாறை ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள், பிநிகபெத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பழனி சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்திரன், துரைசாமி ஆகியோர் முன்னிலையில் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாப்பி பிரசன்னா, மு.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திட்டத்தில் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டனர். வட்டார வளர்ச்சி பணியாளர்கள், வட்டாட்சியர் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இஸ்மாயில், பச்சிராஜ், ராமமூர்த்தி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. அதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.



