நாகர்கோவில் ஜன 23
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில் :-
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வீட்டு உரிமையாளரிடம் கலந்துரையாடப்பட்டது.
மேலும் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15.32 இலட்சம் மதிப்பில் லீபுரம் முதல் கல்லுவிளை ஊராட்சி அலுவலக சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், இத்தார்சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டதோடு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, சாலையின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.93 இலட்சம் மதிப்பில் கிருஷ்ணன்புதூர் தெப்பக்குளம் முதல் ஆமணக்கன்விளை 3வது மடை தூர்வாரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு. இத்தொப்பக்குளத்தினை முறையாக பராமரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆமணக்கன்விளை அரசு தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, இருப்பு பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பெருமாள்புரம் இலங்கைவாழ் தமிழர் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ரூ.6.06 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டமைப்புகள், கழிப்பறை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கட்டுமான பணிகளின் தரம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. சாலையை விரிவாக்கி, இப்பணிகளை விரைந்து முடித்து இலங்கை வாழ் தமிழர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி விவேகனாந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பறை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணாடி இழை தரைத்தளபாலத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா. உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் சத்துணவு கருணாவதி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.