திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:12, திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா நிகழ்வானது தர்மபுரியை தொடர்ந்து திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் துவக்க விழாவினை மேற்கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு பதிவிடப்பட்ட நபருக்கு எரிசக்தி துறையில் வாயிலாக உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விஸ்வநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.