நாகர்கோவில் – அக் -15,
கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20இலட்சம் நிதியில் சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தார் விஜய் வசந்த் எம். பி.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதியில் மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறார் இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அடுத்த குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கக்கோட்டுதலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம்
அருகே சமுதாய நல கூடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர், கோரிக்கையை ஏற்று தனது மேம்பாட்டு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம். பி கலந்துகொண்டு சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் ஜெரால்டு கென்னடி, வட்டாரத் தலைவர் பால்துரை, கிழக்கு மாவட்ட INTUC காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், குருந்தன்கோடு ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



