மதுரை பிப்ரவரி 24,
மதுரையில் கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது ஆணையர் உத்தரவு
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்வதோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பொதுமக்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் உள்ள மாநகராட்சி கழிப்பறைகள் இலவசமாக பயன்படுத்தலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கழிப்பறைகள் கட்டண நிர்ணய அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டண கழிப்பறையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கூடுதல் கட்டணம் வசூலித்த கழிப்பறை பராமரிப்பு ஊழியர் மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஒப்பந்ததாரருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.