திண்டுக்கலில்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும்
திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷாம் ரோஹித்(22) என்பவரை திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி அவர்கள் நீதிமன்ற தலைமை காவலர் அபிராமி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஷாம் ரோகித்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
மேலும் இந்தாண்டு இதுவரை 45 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது