சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார். உடன் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள் சாலூர் ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சம்மாள் சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



