குளச்சல், மார்- 7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் யானை மீது சந்தனம் மற்றும் களபம் பவனி கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்ட கோயிலுக்கு சந்தன கூட பவனி வரும் யானைகளின் உரிமம் கடந்த இரண்டு வருடமாக வனத்துறையிடமிருந்து புதுப்பிக்கப்படவில்லை என கூறி, யானை பவனிக்கு அனுமதி அளிக்கவில்லை.
கோவில் நிர்வாகிகள் உரிமம் புதுப்பிக்கப்பட்ட யானைகளை கொண்டு வந்தால் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக குமரி மாவட்ட யானைகளுக்கு உரிமை புதுப்பிக்கப்படாதால் மண்டைக்காடு கொத்தனார் விளை முத்து சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் குதிரை மீது சந்தனக்கூடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
இதை அடுத்து நேற்று கொத்தனார் விளை யில் இருந்து ஊர் மக்கள் குதிரை வண்டியில் மண்டைக்காடுக்கு சந்தனக் குடம் கொண்டு சென்றனர். 2 குதிரைகள் பூட்டிய வண்டியில் காரியாவிளை, பருத்தி விளை வழியாக மண்டைக்காடு கோயிலுக்கு சென்றடைந்தனர்.