மதுரை ஜூலை 16,
தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு மாநில அளவில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தனிச்சியத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கி குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார்.
இந்நிகழ்வின் போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்



