By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > அரசியல் > வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்
அரசியல்மாநிலம்

வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்

Last updated: June 6, 2024 12:03 pm
June 6, 2024 60 Views
Share
SHARE

வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:

“மக்­கள் நமக்கு மகத்­தான வெற்­றி­யைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். அதைக் கொண்­டா­டு­வது என்­பது மக்­க­ளுக்­கான நமது பணி­யின் மூல­மா­கத்­தான் இருக்க வேண்­டும். ஆர்ப்­பாட்­டக் கொண்­டாட்­டங்­கள் தேவை­யில்லை. வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்,” என்று திமுக தொண்­டர்­க­ளுக்கு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக திமுக தொண்­டர்­க­ளுக்கு அவர் எழு­தி­யுள்ள கடி­தத்­தில், “2022-ம் ஆண்டு விரு­து­ந­க­ரிலே நடை­பெற்ற முப்­பெ­ரும் விழா­விலே நான் உரை­யாற்­றும்­போது, ‘நாற்­ப­தும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்­கத்தை முதன் முத­லில் முன்­வைத்­தேன். அது முழக்­க­மாக மட்­டும் இருந்து விடக்­கூ­டாது, முழு­மை­யான வெற்­றி­யாக விளைய வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக மக்­க­ள­வைத் தேர்­த­லுக்­கான பணி­களை பூத் வாரி­யாக மேற்­கொண்­டது திமுக. ஒவ்­வொரு நாளும் கட்சி நிர்­வா­கி­க­ளைத் தொடர்பு கொண்டு தேர்­தல் தயா­ரிப்­புப் பணி­க­ளின் நில­வ­ரம் குறித்­துக் கேட்­ட­றிந்­தேன். நானும் ஓய்­வெ­டுக்­க­வில்லை. திமுக தொண்­டர்­க­ளாம் உங்­க­ளை­யும் ஓய்­வெ­டுக்­க­வி­ட­வில்லை.

2019-ஆம் ஆண்­டில் கட்­ட­மைக்­கப்­பட்ட நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­ யின் தோழ­மைக் கட்­சி­யி­னர் எப்­படி 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் ஒற்­று­மை­யு­டன் ஒருங்­கி­ ணைந்து நின்­றார்­களோ, அது­போ­லவே இந்த 2024 மக்­க­ள­வைத் தேர்­தல் களத்­தி­லும் பாசி­சத்தை வீழ்த்தி ஜன­நா­ய­கத்தை மீட்­கும் லட்­சிய நோக்­கத்­து­டன் ஒரே அணி­யாக ஒருங்­கி­ணைந்து நின்­ற­னர். நமது நோக்­கத்தை அறிந்து கூடு­த­லான ஆத­ரவை வழங்­கிய இயக்­கங்­க­ளும் தோள் கொடுத்து நின்­றன. இண்­டியா கூட்­ட­ணி­யின் நம்­பிக்கை மிக்க கள­மா­கத் தமி­ழ­கம் அமைந்­தது.

மத­வா­தத்­தை­யும் வெறுப்­ப­ர­சி­ய­லை­யும் விதைக்க நினைப்­ப­ வர்­கள் தமி­ழ­கத்­தில் எப்­ப­டி­யா­வது கால் ஊன்றி விட­வேண்­டும் எனத் திட்­ட­ மிட்­டார்­கள். வன்ம விதை­க­ளைத் தூவி­னா ர்­கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்­கப் பார்த்­தார்­கள். நாட்­டின் பிர­த­மர் 8 முறை தமி­ழ­கத்­துக்கு வந்­தார். திமுக மீது அவ­தூறு சேற்­றினை அள்ளி வீசி­னார். தோழ­மைக் கட்­சி­கள் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை வைத்­தார். அவர் வழி­யி­லேயே அவ­ரது கட்­சி­யி­ன­ரும் செயல்­பட்­ட­னர்.

மற்­றொ­ரு­பு­றம், இந்த மத­வாத சக்­தி­க­ளுக்கு அடி­மைச் சேவ­கம் செய்த அதி­முக தனித்து நிற்­ப­தா­கக் கூறி மறை­மு­கக் கூட்­ட­ணி­யா­கச் செயல்­பட்­டது. இந்த இரண்டு சக்­தி­க­ளும் தமி­ழ­கத்­துக்கு எந்­த­ளவு ஆபத்­தா­னவை, எந்த அள­வுக்­குக் கேடா­னவை என்­ப­தைக் கொள்­கைத் தெளி­வு­டன் எடுத்­து­ரைப்­பது மட்­டுமே தேர்­தல் களத்­தில் எனது பரப்­புரை வியூ­க­மாக அமைந்­தது.

திமுக வெறுப்­புப் பிரச்­சா­ரம் செய்­ய­வில்லை. பொறுப்­பான முறை­யிலே தேர்­தல் களத்­தில் தன் கட­மையை ஆற்­றி­யது. தமி­ழக மேடை­க­ளில் தமி­ழைப் போற்­று­வது போலப் பேசும் பிர­த­மர் உள்­ளிட்ட மத்­திய ஆட்­சி­யா­ளர்­கள் கடந்த பத்­தாண்­டு­க­ளில் தமி­ழ­கத்­தை­யும் தமிழ் மக்­க­ளை­யும் எந்­த­ள­வுக்கு வஞ்­சித்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை ஆதா­ரத்­து­டன் எடுத்­து­ரைத்­தோம்.

கடந்த மூன்­றாண்­டு ­கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் எத்­த­னை­யெத்­தனை திட்­டங்­கள் நிறை­வேற்­ற ப்­பட்டு, எத்­தனை கோடி மக்­கள் அத­னால் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை ஆதா­ரப்­பூர்­வ­மாக எடுத்­துச்­சொன்­னோம். இண்­டியா கூட்­ட­ணி­யா ல்­தான் பாசி­சத்தை வீழ்த்த முடி­யும், ஜன­நா­ய­கத்தை மீட்க முடி­யும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி ­னோம். திமு­க­வின் தேர்­தல் அறிக்­கை­யும் காங்­கி­ர­சின் தேர்­தல் அறிக்­கை­யும் தோழ­மைக் கட்­சி­க­ளின் தேர்­தல் அறிக்­கை­க­ளும் மக்­கள் நலன் காக்­கும் வகை­யில் இருப்­பதை விளக்­கி­ னோம்.

பன்­மு­கத்­தன்மை கொண்ட, மத­நல்­லி­ணக்­கத்­து­ட­னான சமூ­க­நீதி இந்­தி­யா­வைப் பாது­காத்­திட இண்­டியா கூட்­ட­ணி­ யால்­தான் முடி­யும் என்­ப­தைக் கொள்கை வழி­யில் எடுத்­து­ரைத்­தோம். எல்­லா­ருக்­கும் எல்­லாம் என்­கிற திரா­விட மாடல் இந்­தியா முழு­மைக்­கும் பரவ வேண்­டிய அவ­சி­யத்தை தோழ­மைக் கட்­சி­யி­ன­ரும் எடுத்­துச் சொன்­னார்­கள்.நாம் மக்­களை நேர­டி­யா­கச் சந்­தித்­தோம்.

மூன்­றாண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டங்­கள் அவர்­க­ளைச் சரி­யா­கச் சென்று சேர்ந்­தி­ருப்­பதை உறுதி செய்­தோம். நம்­மி­டம் மேலும் அவர்­கள் என்ன எதிர்­பார்க்­கி­றார்­கள் என்­ப­தைப் புரிந்­து ­கொண்­டோம். அவர்­க­ளின் கோரிக்­கை­களை, கேள்­வி­க­ளைச் செவி­ம­டுத்­தோம். 

அதை­விட முக்­கி­ய­ மாக, திமுக கூட்­டணி மீது­தான் தமி­ழக மக்­கள் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­தைக் களத்­தில் கண்­டோம். அவர்­க­ளின் நம்­பிக்­கை­தான் இன்று முழு­மை­யான வெற்­றி­யாக விளைந்­தி­ருக்­கி­றது.

40 தொகு­தி­க­ளில் ஏறத்­தாழ பாதி அளவு தொகு­தி­க­ளில்­தான் திமுக போட்­டி­யிட்­டது. மீத­மி­ருந்த தொகு­தி­கள் தோழ­மைக் கட்­சி­க­ளின் வெற்­றி­வாய்ப்பை உறு­தி­ செய்­யும் வண்­ணம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன. அந்­தத் தொகு­தி­க­ளும் நமது தொகு­தி­கள்­தான் என்ற தோழமை உணர்­வு­டன் திமுக தொண்­டர்­கள் தேர்­தல் பணி­களை நிறை­வேற்­றி­னர். திமுக போட்­டி­யிட்ட தொகு­தி­க­ளில் தோழ­மைக் கட்­சி­யி­னர் துணை­நின்று பணி­யாற்­றி­னர். இத்­த­கைய ஒருங்­கி­ணைப்­பு­தான் நாற்­பது தொகு­தி­க­ளி­லும் வெற்­றி­யைச் சாத்­தி­ய­மாக்­கி­யி­ருக்­கி­றது.

இதற்­குக் கார­ண­மான, தோழ­மைக் கட்­சித் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் அனை­வ­ருக்­கும் என் மன­மார்ந்த நன்றி. தேர்­தல் களத்­தில் போட்­டி­யி­டும் வாய்ப்பு அமை­யாத நிலை­யி­லும், இந்­தி­யா­வைக் காத்­திட இண்­டியா கூட்­ட­ணியை வெற்றி பெறச் செய்ய வேண்­டும் என்ற லட்­சிய நோக்­கத்­து­டன் முழு மூச்­சாய்ச் செய­லாற்­றிய அர­சி­யல் இயக்­கத்­தி­னர், அமைப்­பி­னர் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும் என் இத­யப்­பூர்வ நன்­றியை உரித்­தாக்­கு­கி­றேன்.திமுக தலை­மை­யி­லான அணி மீது முழு­மை­யான நம்­பிக்கை வைத்து, மூன்­றாண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யின் பயன்­மிகு திட்­டங்­க­ளுக்கு நற்­சான்­ற­ளிக்­கும் வகை­யில் நாற்­பது தொகு­தி­க­ளி­லும் முழு­மை­யான வெற்­றியை அள்­ளித் தந்த தமி­ழக வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்கு கோடா­னு­கோடி நன்றி.

மத்­திய ஆளுங்­கட்­சி­யின் அதி­கார பலம், அடக்­கு­மு­றைத்­த­னம், அவ­தூறு பரப்­பு­ரை­கள் இவற்­றைத் தகர்த்­தெ­றிந்து நாற்­ப­துக்கு நாற்­பது என்ற மகத்­தான வெற்­றி­யைப் பெற்­றி­ருக்­கி­றோம். மத­வாத அர­சி­யல் சக்­தி­கள் மல­ரவே முடி­யா­த­படி செய்­தி­ருக்­கி­றோம். இந்­தி­யா­வில் உள்ள மாநி­லங்­க­ளில் ஒரே அணி முழு­மை­யான வெற்றி பெற்­றது என்­பது ஒரு சில மாநி­லங்­க­ளில்­தான். அதில் இண்­டியா கூட்­ட­ணிக்கு முழு­மை­யான வெற்றி கிடைத்­தி ­ருப்­பது தமி­ழ­கம் – புதுச்­சே­ரி­யில் மட்­டும்­தான் என்­பது திமுக தொண்­டர்­க­ளின் ஓயாத உழைப்­புக்­கும், நம் மீது மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கைக்­கு­மான சான்று.

மக்­கள் நமக்கு மகத்­தான வெற்­றி­யைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். அதைக் கொண்­டா­டு­வது என்­பது மக்­க­ளுக்­கான நமது பணி­யின் மூல­மா­கத்­தான் இருக்க வேண்­டும். ஆர்ப்­பாட்­டக் கொண்­டாட்­டங்­கள் தேவை­யில்லை. வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள். அவர்­க­ளின் குர­லாக மக்­க­ள­வை­யில் ஒலிப்­போம் என்ற உறு­தி­யினை அளி­யுங்­கள்.தொகு­திக்­கான தேவை­களை நிறை­வேற்­றப் பாடு­ப­டு­வ­தும், மாநி­லத்­தின் நல­னைக் காக்­கும் செயல்­பா­டு­க­ளுமே உண்­மை­யான வெற்­றிக் கொண்­டாட்­ட­மா­கும்.

நாடே திரும்­பிப் பார்க்­கும் வகை­யி­லான நாற்­ப­துக்கு நாற்­பது என்ற இந்த வெற்றி, இந்­திய அர­சி­ய­லின் அடுத்த ஐந்­தாண்­டு­க­ளுக்கு மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். மத்­திய ஆட்­சி­யா­ளர்­கள் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை என்­ப­தைத்­தான் தனிப்­பெ­ரும்­பான்மை பெற முடி­யாத பாஜ­க­வின் சரிவு காட்­டு­கி­றது. அவர்­க­ளின் கோ ட்டை என நினைத்­தி­ருந்த மாநி­லங்­க­ளில் இண்­டியா கூட்­டணி பெரும் வெற்றி பெற்­றுள்­ளது. மக்­க­ள­வைத்­தில் சரிக்­குச் சரி­யாக இண்­டியா கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர்­கள் இடம்­பெ­ற­வி­ருப்­பது ஜன­நா­ய­கம் கட்­டிக் காக்­கப்­பட்­டி­ருப்­ப­தன் அடை­யா­ள­மா­கும்.

சர்­வா­தி­கா­ரத்­த­ன­மான ஒற்­றை­யாட்சி முறைக்கு மக்­கள் ஆத­ர­வாக இல்லை என்­பதை இந்­திய மக்­க­ள­வைத் தேர்­தல் முடி­வு­கள் காட்­டு­கின்­றன. மக்­க­ளின் ஆன்­மீக நம்­பிக்­கை­களை அர­சி­யல் சுய­லா­பத்­துக்­குப் பயன்­ப­டுத்த நினைக்­கும் மத­வாத சக்­தி­களை, கோயில் கட்­டிய மண்­ணி­லேயே வீழ்த்­திக் காட்­டி­யி­ருக்­கி­றார்­கள் இறை­நம்­பிக்­கை­யுள்ள வாக்­கா­ ளர்­கள். சிறு­பான்மை மக்­க­ளின் நெஞ்­சில் இருந்த அச்ச உணர்வு நீங்­கி­யி­ரு க்­கி­றது.

தமி­ழ­கத்­தி­லும் இந்­திய அள­வி­லும் நமது கூட்­டணி பெற்­றுள்ள வெற்­றி­யால் சர்­வா­தி­கா­ரத்­துக்­குக் கடி­வா­ளம் போடப்­ப ட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்­தின் நம்­பிக்­கைத் துளிர்­கள் அரும்­பி­யுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பு வழங்­கி -­யுள்ள நெறி­மு­றை­க­ளைப் பாது­காக்­கின்றவகை­யில், நாட்டை வழி­ந­டத்­தும் பணியை இண்­டியா கூட்­டணி மேற்­கொள்­ளும். அதற்கு நாற்­ப­துக்கு நாற்­பது என்ற மகத்­தான வெற்றி பெருந்­து­ணை­யாக இருக்­கும்,” என்று முதல்­வர் கூறி­யுள்­ளார்.

You Might Also Like

TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சேலம்மாவட்டம்

மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள்

October 4, 2024 58 Views
நாகர்கோவில் இலவச மருத்துவ முகாமை
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?