தருமபுரி மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி கிழக்கு மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றிய பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பொது உறுப்பினர் கூட்டம் சி. கே. சரவணன் ஒன்றிய அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரை தடங்கம். பெ. சுப்பிரமணி தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், இன்பசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ,வழக்கறிஞர் ஆ. மணி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர், சபரிநாதன் பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர், சண்முகம் பேரூர் கழகச் செயலாளர் மற்றும்பி. மாதேஷ், பி. சி. சரவணன், கல்பனா, மாதேஷ், சிவகுமார், பெரியசாமி, முனியப்பன், செல்வம், பிருந்தா நடராஜன்,விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசியதாவது 2026- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள், இல்லம்தேடி இளைஞரணி சேர்த்தல், ஊர் தோறும் மகளிர் அணி உறுப்பினர் சேர்த்தல், கழக ஆக்க பணிகள்,நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியவை குறித்து அவர் பேசினார். இதில் பாப்பாரப்பட்டி பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



