ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 67 வது நினைவு தினத்தை ஒட்டி அன்னாரின் நினைவிடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்), முருகேசன் ( பரமக்குடி), தமிழரசி ரவிக்குமார் ( மானாமதுரை), திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் உடன் உள்ளனர்.



