சுசீந்திரம், மார். 27 –
சுசீந்திரம் அக்கரை செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் தம்புரான் (30). இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரும் லதா (24) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 53 நாட்களே ஆன நிலையில் கடந்த 22ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார்.
அதிர்ச்சியடைந்த தம்புரான் தனது மனைவியை பல்வேறு இடங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் லதாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுசீந்திரம் காவல் நிலையத்தில் தம்புரான் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மாயமான லதாவின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் உதவியுடன் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமணமான 53 நாட்களிலேயே புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


