கிருஷ்ணகிரி செப் 24: கிருஷ்ணகிரியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வாசவி கிளப் இண்டர்நேஷனல், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பல்வகை இலவச மருத்துவ முகாமினை நடத்தினார்கள். இந்த மருத்துவ முகாமினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றிதுவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த இலவச மருத்துவ முகாம் மூலம் உயர் சிசிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான சாப்பிட்டுத் திட்டம் மூலம் சுமார் 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற மருத்துவ முகாமில் பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் கலந்துக்கொண்டு, புற்றுநோய் கண்டறிதல், இதய நோய் கட்டறிதல், உள்ளிட்ட பல்வகை நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துக்
கொண்டு பயன்பெற்றனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் வாசவிகிளப் தலைவர் சீதாராமன், பொருளாளர் பிரேம்குமார், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் ஏ.ஜி.ஜாய், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.