சேலம் மாவட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில்
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அதிமுக கட்சி பொதுச் செயலாளர்,
தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர்
எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர்
ஆர். இளங்கோவன் அறிவுறுத்தலின்படி, வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடேசன் ஏற்பாட்டில் வீரபாண்டி சட்ட மன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து கொடியேற்றி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. உடன் கமலா கருப்பணணன், சித்துராஜ், இளம்பிள்ளை பேரூர் கழகச் செயலாளர் கிருஷ்ணன், அரியானூர் பழனிசாமி, ராக்கிப்பட்டி கிருஷ்ணன், சீரகாப்பாடி கே.செல்லாண்டி ,கே.ஸ்.பி.சரவணன், வடிவேல், எஸ்.எம். ஆர்.மாதேஸ்வரன். குட்டி (எ) ஆறுமுகம். வெங்கடேசன், அப்பு (எ)சந்தோஷ்குமார், சதீஷ்குமார், கருணாநிதி, எஸ். எஸ் .ஆர். பழனிசாமி, D.I. உதயகுமார், துரைசாமி, முருகேசன், பழனிசாமி, கண்ணன், ஜீவா, சேதுபதி , ஜெயபிரகாஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.