கன்னியாகுமாரி டிச 6
அஞ்சுகிராமத்தில் பேரூர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூர் அதிமுக செயலாளர்
இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் ஜெஸீம் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், காமாட்சி, மகளிர் அணி துணைச் செயலாளர் அருள் செல்வி, தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் சுந்தரம்பிள்ளை, சுந்தர், சுரேஷ், விஜயன், டேவிட், ராஜன், சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.