திருப்பூர் ஜூலை: 12
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி
மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். விஜ யலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு பாலமுருகன் கொண்ட குழுவானது அவிநாசியில் சாலை யோரங்களில் உள்ள பானிபூரி விற்பனை கடைகள் இரவு நேரங்களில் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது அதிகளவு கலர் சேர்க்கைப்பட்ட சிக்கன் சுமார் 1.5 கிலோ அளவில் அழி க்கப்பட்டது.
மேலும் சுகாதாரமற்ற இரண்டு கடைகளுக்கு தலாரூ. 1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு உரிமம் இல்லாமல் தயாரிப்பு மற்றும் விற்பனை மேற்கொள்ளக்கூடிய வண்டிக்கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமான தயாரிப்பு மற்றும் விற்பனை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கபட்டது. மேலும் பானிபூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்களான மைதா ரவை தரமானதாகவும் பயன்படுத்தக்கூடிய எண்ணையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் அதே எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்றும் பொறித்த எண்ணையின் மீது மீண்டும் புதிதாக எண்ணையை ஊற்றி டாப் அப் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக் கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கிருமி மற்றும் பூச்சி தொற்று இல்லாதவாறு பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பாணி பூரிக்கான பானி தயாரிக்கும் பொழுது பயன்படுத்தக்கூடிய புதினா,மல்லித்தழை, மிளகாய், மசாலுக்கு பயன்படுத்தக் கூடிய கிழங்கு,வெங்காயம் போன்ற பொருட்கள் தராமனதாகவும் தினமும் வாங்கி பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதில் ரசயாணகலவை ஏதும் இல்லாதவறு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மேலும் பானீ தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் நல்ல தரமான குடிநீரை பயன்படுத்தும்படி யும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியாகவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் தயாரிக்கப்பட்ட பானிபூரி, பானீ மற்றும் மசால் வகைகளை விற்பனைக்காக எடுத்துச் செல்லும் பொழுது நன்றாக மூடிய நிலையில் எடுத்து சென்று சுகாதாரமான இடத்தில் வைத்து விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தெரு ஓரங்களில் அசுத்தமான இடங்களில். கழிவுநீர் செல்லும் பாதைகளின் அருகில் வைத்து விற்பனை மேற்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பாணிபுரியை விற்பனை செய்பவர் பூரியை உடைத்து அதிலே பானீயை சேர்த்து விற்பனைக்கு வழங்கும் பட்சத்தில் கண்டிப்பாக கையுறை மற்றும் தலையுறை அணிந்திருக்கம்
படியாகவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்தில் சுகாதாரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தாங்கள் பாணிபூரி கடைகளில் பானிபூரிகளை வாங்கி உண்ணும் போது விற்பனையாளரின் தன் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் விற்பனையாளராள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விழிப்புடன் செயல்படவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஏதேனும் உணவு குறித்த புகார்கள் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் 94440- 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.