By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > Blog > தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Blog

தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

Aswini GopalaKrishnan
Last updated: May 7, 2025 11:52 pm
Published May 7, 2025
Share
SHARE

சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தமிழ் நாடு உணவு பாதுகாப்பு துறை முதன்மையின் செயலாளர்/ஆணையர் ர.லால்வேனா மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்ஆகியோரதுஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இதன் தொடர்ச்சியாக கிடைக்க பெற்ற ரகசிய தகவல் அடிப்படையில் தூத்துக்குடியில் உரிமமின்றி இயங்கிய மாட்டிறைச்சிக் கடையில், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் வைத்திருந்த 110 கிலோ பழைய மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ச.மாரியப்பன் உத்திரவின் பேரில், மாநகராட்சி பகுதி-1-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம் மாநகராட்சி அண்ணா நகர் 12-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டினை திடீர் ஆய்வு செய்தனர். அப்பொழுது, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
மேலும், உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் வைத்திருந்த 110 கிலோ பழைய மாட்டிறைச்சி் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி உதவியுடன், கிருமிநாசினி தெளித்து, புதைத்து அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் வரை, அந்த இறைச்சிக் கடையில் எவ்விதமான இறைச்சியும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி வியாபாரம் செய்வோர், மாநகராட்சி/நகராட்சி/இதர உள்ளாட்சி அமைப்புகள் வரையறுத்த இடங்களில் மட்டுமே ஆடு/மாடு/பன்றி போன்றவற்றை வதம் செய்ய வேண்டும். குடியிருக்கும் வீடுகளினுள் காலநடைகளை வதம் செய்து, இறைச்சி விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அனுமதி இல்லை.

மேலும், மாடு அல்லது பன்றி போன்ற பெரிய விலங்குகளை வதம் செய்து, இறைச்சியாக விற்பனை செய்ய, மாநகராட்சி/நகராட்சி/இதர உள்ளாட்சி அமைப்புகள் அல்லது காவல் துறையிடமிருந்து “தடையின்மைச் சான்று” அவசியம் வேண்டும். அச்சான்று இல்லாமல் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கப்படமாட்டாது. உணவு பாதுகாப்பு உரிமமின்றி எவ்விதமான இறைச்சியும் விற்க கூடாது.
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ இறைச்சி வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால், உணவு பாதுகாப்புத் துறையால் உரிமமின்றி செயல்படும் உணவு வணிக நிறுவனம்/கடை மூடப்படும் என்பதுடன், வழக்கு பதிவு செய்து, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
நுகர்வோர்களும் இறைச்சி வாங்கும் போது, கடைக்கு FSSAI உரிம எண் உள்ளதா, மாட்டிறைச்சி/பன்றி இறைச்சி போன்றவற்றிற்கு உள்ளாட்சி அமைப்பிடம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டுள்ளதா என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடுகள் குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை

கக்கரம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி

கேரளாவை சேர்ந்த வாலிபர் விபின் சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சி சார்பாக கோபால்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட

தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்

தின தமிழ் தின தமிழ் July 5, 2024
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பிசினஸ் ஐக்கானிக் அவார்டு
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?