கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வயிறு வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் ரத்த நாள மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவரை குணமடைய செய்து சாதனை படைத்துள்ளனர். மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது என ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காலின்ஸ் எப்ரேம் நோபல், மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் கிங்ஸ்லி ஜெயசிங், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசப்சென், உதவி அலுவலர் டாக்டர் விஜய லட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.



