மார்த்தாண்டம், மார்ச் 30 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன்கரை விலை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (58). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (53). காங்கிரஸ் கட்சியின் முஞ்சிறை ஒன்றிய மகளிர் அணி தலைவராக உள்ளார். இவர்கள் சேர்ந்து கடந்த
2014 ஆம் ஆண்டு நாகர்கோவில் சிட்டி யூனியன் வங்கி கிளையில் இருந்து, ரகுதாஸ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் 15 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த கடனுக்காக ரசல்ராஜ் அவர் மனைவி அனிதா ஆகியோர் தனது வீட்டுடன் கூடிய சொத்து மற்றும் வீட்டினுடைய நிலத்தை அடமானமாக வைத்து, அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து கடன் வாங்கி உள்ளார்கள். ஆனால் கடன் வாங்கிய நபர்கள் திரும்ப கடனை அடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் வங்கி நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. கடந்த 26 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டை பூட்டி சீல் வைத்து, வீட்டை கையகப்படுத்தி வங்கி அதிகாரியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் சார்பில் காவலாளி நியமிக்கப்பட்டு இருந்தார்.
சம்பவ நாளில் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளியை ரசல் ராஜ் மற்றும் அனிதா ஆகியோர் கொலை விரட்டல் விடுத்து அவரை விரட்டியுள்ளனர். பின்னர் காவலாளியால் பூட்டப்பட்ட விட்டு வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று வீட்டை கைவசப்படுத்தி உள்ளார்கள்.
இது குறித்து வங்கி கிளை மேலாளர் பாஸ்கர் (46) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் வழக்குப்பதிவு செய்தார்.


