தென்தாமரை குளம்., டிச. 11.
தென்தாமரைகுளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் அழித்தனா்.
தென் தாமரை குளத்தில் சாலையோரம் உள்ள தென்னந்தோப்பில் ஒரு தென் னைமரத்தில் விஷவண்டுகள் கூடுக்கட்டி உள்ளன. இந்த விஷ வண்டுகள் அந்த வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜில்லி ஆல்வின் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் தீப்பந்தம் மூலம் அந்த விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் தென்தாமரைகுளம் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர்.