நாகர்கோவில் ஆக 8
கன்னியாகுமரி மாவட்டதில் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக
6-ம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவருக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறையின் சார்பாக தபால் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக “தீன் தயல் ஸ்ப்ரேஷ் யோஜன ” என்னும் உதவித்தொகை திட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான தீன் தயல் ஸ்ப்ரேஷ் யோஜன தேர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இத்தேர்விற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தங்கள் பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் பிலடெல்லி ஸ்கூல் கிளப் உறுப்பினராக அல்லது பிலடெல்லி டெபாசிட் அக்கௌன்ட் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். புதிதாக பிலடெல்லி டெபாசிட் அக்கௌன்ட் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் ரூ. 200/- செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2024. அனுப்ப வேண்டிய முகவரி: ” தபால் நிலைய கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் 629001″. முதல் கட்ட (எழுத்து வினாடி வினா) போட்டி நடைபெறும் நாள்: 28.09.2024. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர் தபால் தலை சேகரிப்பு பிலடெல்லி என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.