தஞ்சாவூர் ஏப்ரல் 19.
செம்மொழியின் சிறப்பை உணர்த் தும் வகையில் பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்காக கட்டுரை மட்டும் பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான வருகிற ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் htts://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர், முதல்வரின் பரிந்துரையோடு விண்ணப்ப படிவங்களை tamilvalar.tnj@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த மாதம் மே 5 தேதிக்குள் அனுப்ப வேண்டும் .மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் 7,000 மூன்றாம் பரிசு ரூபாய் 5,000 பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளானது பள்ளி மாணவர் களுக்கு அடுத்த மாதம் (மே9 )தேதி யும் கல்லூரி மாணவர்களுக்கு (மே 10)தேதியும் தஞ்சாவூர் கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியின் போது செம்மொழியின் சிறப்பு மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் தமிழ் தொண்டி ன் பெருமை சார்ந்த தலைப்பு அளிக்கப்படும்
மாவட்ட போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் அடுத்த மாதம் (மே 17)ஆம் தேதி அன்று சென்னை யில் நடைபெறும் மாநில போட்டி யில் கலந்து கொள்ளும் வாய்ப் பினை பெறுவர் .தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர் கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் பங்கேற்று பயன் பெற லாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



