கம்பம்.
சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகள் சிறந்த ஆசான்களுக்கான சிறந்த ஆசான் விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பபயிற்சியாளர்கள்,ஆசான்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை ஆசான் செந்தில் ராம்குமார் அவர்களுக்கு சிறந்த களரி ஆச்சாரியார் விருதுனை ஆளுநர் ஆர். என். ரவி நேரில் வழங்கினார். உடன் பல்வேறு மாவட்ட ஆசான்கள்,பயிற்சியாளர்கள்,பெற்றோர்கள் மாணாக்கர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். களரி ஆச்சாரியார் விருது பெற்று ஊர் திரும்பிய ராணாஸ் செந்தில் ராம்குமாருக்கு பெற்றோர்களும் மாணாக்கர்களும் கம்பத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிலம்ப ஆசான்களுக்கும்,பயிற்சியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.