காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை நாகர்கோவிலில் குடும்ப தகராறில் பரிதாபம்
நாகர்கோவில், மே 8:
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் கணபதி. (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுனிதா. (35) இரண்டு பேரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். சுமார் ஒரு வருடத்திற்கு முன் சுனிதா கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.
பலமுறை அழைத்தும், வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கணபதி தனது மனைவி சுமிதாவின் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது தான் விஷம் குடித்து விட்டதாகவும் நீ குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இது குறித்து சுனிதா உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து கணபதியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணபதியை அவரது மனைவி சுனிதா உடனிருந்து கவனித்து வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதி பரிதாபமாக இறந்தார். இதை அடுத்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று கணபதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.