தஞ்சாவூர்.மே 21.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வருகிற 31ஆம் தேதிக் குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடைமடை வரையிலும் அனைத்து பிரிவு நீர் நிலைகளிலும் தண்ணீர் செல்ல வேண்டும், என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிக்கால்கள் என 1379.18. கி.மீ தொலைவிற்கு ரூபாய் 26.20 கோடி யில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது
தஞ்சாவூர் அடுத்துள்ள பள்ளியக்ரஹாரம் சுங்கான் திடல் அருகே வாழைப்பூ வடிக்கால் வாய்க்கால் ரூபாய் 7 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது
6 கி.மீ தூரம் உள்ள இந்த வாய்க்கால் எந்திரம் மூலம் தூர்வாரப்படுவதை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது பொதுப்பணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு உதவி செயற்பொறி யாளர்கள் சித்ரா, விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை விரைந்து தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் தற்போது வரை 70 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன மீதமுள்ள பணிகளை யும் விரைந்து வருகிற 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றார்.



