கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமரை செல்லியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது இந்த கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இன்று அமாவாசை பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிபி. சக்கரவர்த்தி, ஊர் கவுண்டர் சுப்பிரமணி, கவுன்சிலர் ரமேஷ்,வெள்ளையன்,காமராஜ், ரங்கநாதன், குமரேசன், ராஜமாணிக்கம், சரவணன், சக்திவேல், கமலக்கண்ணன், பாலமுருகன் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலை வசதி இல்லாமல் மழைக்காலங்களில் மிகவும் மோசமாக உள்ளதால் எங்கள் கோவில் செல்லக்கூடிய பக்தர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஊனமுற்றோர் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் எனவே சாலையை சீரமைத்து அமைத்து தர மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலை சீரமைத்து தர பக்தர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்



