அக்:6
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் (11.09.2024) திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளம் ஏற்படுத்தவும், திருப்பூர் மக்களின் நன்மை கருதியும், திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு சவாரி, நீர்விளாயட்டுகள், மற்றும் பார்வையாளர் மாடம் அமைத்து மேம்படுத்துதல், படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது 99 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் ஏரி அமையும். மேலும், ஆண்டிப்பாளையம் ஏரி பகுதியில் மேலும் என்னென்ன சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இவ்ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.