மதுரை ஜூன் 15,
மதுரையில் இரத்த நன்கொடை 20 ம் ஆண்டு கொண்டாட்டம். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பேரணி கருத்தரங்கத்தை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.செ. தர்மராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



