சேலம் அஸ்தம்பட்டி ஏடிசி டிப்போ அருகே அமைந்துள்ள கொடி கம்பத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி தலைவர் ஸ்ரீதர், சபரிநாதன், கீர்த்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



