தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் துவக்கி வைத்து சிறப்புயாற்றினார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த பத்தாம் தேதி பள்ளி வாள்களுக்கான சிறப்பு கூட்டாய்வு நடந்தது. இதில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து குறைகள் உள்ள வாகனங்களுக்கு சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வானங்களில் இருக்கை வசதி, வாகனத்தின் காப்பீட்டு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பேருந்தின் தளம், பள்ளிக் குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள், பள்ளி குழந்தைகள் புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுனர்களும் தங்களின் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இம் முகாமில் 250 ஓட்டுநர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 15 பேருக்கு பார்வையில் குறைபாடு, கண்ணில் புரை உள்ளதை கண்டறியப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்பரிசோதனையில் ஏதேனும் குறைகள் இருப்பின் அந்த குறைகளை சரி செய்து அதன் பின் பு வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஓட்டுநர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.



