அரியலூர், ஜூன்:15
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் குடிநீர் மோட்டார் பம்ப் ரூம் கட்டிடம் இடிப்பு… பொதுமக்கள் கண்டனம்! ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலர்கள் அனுமதி இன்றி இடித்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அலுவலர்களுக்கு புகார் கொடுத்ததை தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய ஸ்கிம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர் அவர்களும், கிராம ஊராட்சி செயலாளர் சிதம்பரம் அவர்களும் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,இரும்புலிக்குறிச்சி பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை தீர போர்வெல் விரைவில் அமைக்கபடும் என உறுதி அளித்தனர்.



