திருநெல்வேலியில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் சார்பில் கண்டன அறிக்கை:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சுகாதார மற்ற அவல நிலை குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட மாலை முரசு நிறுவனத்தின் மண்டல செய்தியாளர் சரவணனை தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளி விட்ட சம்பத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு சுகாதாரமான மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரமற்ற அவல நிலை குறித்து படம் பிடிப்பதை எவ்வாறு தடுக்க முடியும்? சுகாதாரமான சிகிச்சைக்கு முயற்சி செய்யும் செய்தியாளர்களை தடுப்பது, தமிழக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும். எனவே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த RMO என்று கூறிக் கொள்ளும் ரவியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில சங்கத்தின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.