ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் மன்ற பதினைந்தாம் ஆண்டு தொடக்க விழா, மகாகவி பாரதியார் நினைவு நாள் விழா, மகாத்மா காந்தி ஜெயந்தி விழா என முப்பெரும் விழா , வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன். தலைமை
யில் நடைபெற்றது.
தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சங்கீதா விழா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து நிகழ்ச்சிகளை விவரித்தார்
மாணவத் தலைவர். செல்வி சுபஸ்ரீ வரவேற்றார். வேந்தர் தம் தொடக்கவுரையில்
“பேச்சுத் திறமைதான் வேலைவாய்ப்பு, உலக அரங்கில் பெயர் பெறவும் சரியான பாதை “என்றார் .
துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த்,
துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,
மாணவர் நல இயக்குனர் முனைவர் அ. சாம்சன் நேச ராஜ் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் ‘டி. டி ரிட்டன்ஸ் திரைப்படப்’ புகழ் இயக்குனர் .ஏ.ஆர்.
மோகன் தமிழ் மன்ற
” நன்மொழி என்ற ஸாபாட்டிபை வானொலி சேனலை” வெளியிட்டு, தமிழ் மொழியும் திரைப்படமும் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
மேலும். “மாதா, பிதாவை போற்ற வேண்டும் , குருவை வணங்க வேண்டும் “என்றார்.
விஜய் டிவி புகழ் கவிஞர் சுடர்விழி என்ற பௌசியா பானு பேசுகையில்
” தமிழில் அர்த்தம் புரியாத சொற்கள்,பாரதியின் புரட்சிப் பெண், காந்தி போன்று மகாத்மா வாக வாழ வேண்டும் “என்றார். பேராசிரியர் விமல் சுப்பிரமணியம் எழுதிய “கை விரல் சேர்க்கை” என்ற நூலை வேந்தர் வெளியிட்டார். ரேடியாலஜி துறை மாணவர் ஷாஹித் ஆஃபரிதி, ஆறு நொடிகளில் அரை லிட்டர் தண்ணீரைக் குடித்து உலக சாதனை நிகழ்த்திய தற்கான விருதை வேந்தர் வழங்கினார்.
முனைவர் சி. சங்கீதா எழுதி பின்னனிக்குரல் கொடுத்து விஸ்காம் துறைப் பேராசிரியர் திரு அமல்ஜித் , பேராசிரியர் பிரபாகர் தயாரித்த கலசலிங்கம் வாழ்க்கைப் பயணக் காணொலியும் திரையிடப்பட்டது. “சூப்பர் சிங்கர் புகழ்” செல்வி கோபிகா பாடினார். சென்னை , கிஷோர் மற்றும் சக்தி ரீபூட் இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரி, மாணவர்களின் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.
மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.



