தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 ஜூன் 4 அன்று நடைபெறுவதை முன்னிட்டு செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி அரங்கில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பிரிவு அலுவலர்கள் அனைத்து வட்டாட்சியர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



