மதுரை மார்ச் 30,
மதுரை மாநகராட்சி மண்டலம்-3, வார்டு 70 நேரு நகர், துரைச்சாமி நகர், மற்றும் வேல்முருகன் நகர் ஆகிய இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.