மதுரை ஜூன் 18,
மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 நாட்கள் குடிநீர்நிறுத்தம். மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் விநியோகம் வைகை குடிநீர் இரண்டில் 700 எம்.எம். பைப்பில் ஆரப்பாளையம் மேல் நிலைத்தொட்டிக்கு இரண்டாவது குடிநீர் விநியோகத்தை நிறுத்தி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எதிர்வரும் ஜூன் நாளை 19.ந்தேதி புதன்கிழமை வைகை வடகரை பகுதிகளான வார்டு எண்.10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண்.21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப் படுகிறது. மேலும் வைகை குடிநீர் விநியோகம் வைகை 1ல் 1000 எம்.எம்.பி.எஸ்.சி. பைப்பில் இருந்து கோச்சடை மேல்நிலைத்தொட்டிக்கு வைகை முதல் குடிநீர் விநியோகத்தை நிறுத்தம் செய்து 300 எம்.எம்.டி.ஐ. பைப்புடன் பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எதிர்வரும் ஜூன் 21 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண்.46, 47, 48, 49, 53, 70, 72 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது