சென்னை ஏப்ரல். 03
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் மாதத்திலேயே, மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உள்ளிட்ட மொத்தம் 1,17,310 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி X தளத்தில் தெரிவித்திருந்தார் அது தற்போது வைரலாக பரவி வருகிறது
“தமிழ்நாடு முழுவதும் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் தரமான கல்விக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்கால வெற்றிக்காக உறுதியாக செயல்படுவோம்.”
மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பள்ளிகள் மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவுகின்றன. கல்வியின் துணை கொண்டு வெற்றி பெற, தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகின்றன!