சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நல்லாயன் கன்னியர் இல்லத்தில் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நல்லாயன் கன்னியர் இல்ல பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அயோத்தியாபட்டணம் வட்டார மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, சேலம் மக்கள் டிரஸ்ட் இயக்குனர் ஜெயம், அன்பின் நிழல் அமைப்பில் இயக்குனர் விஜயகுமார், மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக நல்லாயன் கன்னியர் இல்லம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஆரோக்கியமேரி கடந்த 25 ஆண்டுகளாக அயோத்தியாபட்டணம் வட்டார அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நிறுவனம் செய்த அனைத்து பணிகளையும் எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து எவ்வாறு மேலும் பழங்குடியினர் மற்றும் பட்டியலின சமூக பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலன் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்று கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வின் பங்கேற்பாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக நாங்கள் என்றும் கரம் கொடுப்போம் என்று உறுதி அளித்தனர். இந்த கூட்டத்தின் அடுத்த கட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக கிராமிய அளவில் செயல்படும் நிறுவனங்களை கண்டறிந்து கூட்டு முயற்சியாக செயல்பட திட்டமிடல் செய்யப்பட்டது.



