தஞ்சாவூர் ஜூலை 22.
தமிழர்களின் நாட்டிய மரபை பாதுகாப்பதற்காக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும், கொச்சி இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தியாகராஜன் கொச்சி இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் மீனா அனில் குமார் கையொப்பமிட்டு ஒப்பந்தத் தை பரிமாற்றிக் கொண்டனர்
இதன் மூலம் தமிழ் பண்பாட்டு மையத்தில் நடத்தப்படும் குரலிசை கருவியிசை ,பரதநாட்டியம், நாட்டுப் புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் இந்திய கலாச்சார ம் மற்றும் பாரம்பரிய மையம் மூல மாக நடத்தி தமிழ் பல்கலைக்கழகம் வழித்தேர்வுகள் நடத்தவும், சான்றி. தழ் வழங்கவும் வகை செய்யப்படும் என்றார். பதிவாளர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் கற்பகம், தமிழ் வளர்மைய இயக்குனர் குறிஞ்சி வேந்தன், மக்கள் தொடர்பு அலுவலர் (பொ)முருகன், மொழி யியல் பேராசிரியர் இராஜேஷ், உதவியாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.