நாகர்கோவில், ஜூன் 22 –
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் ஆலோசனையின்படி நாகர்கோவில் மாநகரம் 12வது வார்டு, பரதர் தெருவில் உள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து10 மற்றும் 12வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 60 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை 12வது வார்டு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா பவுண்டேஷன் நிறுவனரும் தவெக நிர்வாகியுமான P.பால்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் 200 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்த விழாவில் வார்டு நிர்வாகிகள் அஜித், கைலாஷ், நிஷாந்த், அர்ஜுன், ரேவதி, வழக்கறிஞர் சுரேஷ் பாபு உட்பட மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



