நாகர்கோயில், மே – 29,
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், சினிமா டைரக்டருமான பி.டி செல்வக் குமார் அனுப்பியுள்ள மனு:-
நாகர்கோவில்- அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடைவரம்பு விசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அன்றைய முதல்வர் காமராஜர் கூண்டு பாலம் அமைத்தார். இது குறுகியதாகவும், உயரம் குறை வாகவும் இருந்ததால், ரூ.2 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு பழைய பாலம் இடிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப் பட்டது. பொதுமக்கள் இதனால் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறார்கள். மேலும் தற்காலிக சாலை வழியாக டூவீலர்கள் மற்றும் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப்டுகிறது. இரவு நேரங்களில் போதிய மிண்சாரவசதி இல்லாத காரணத்தி னால் கடும் இருட்டில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பொது , மக்கள் நவன்கருதி பாலத்தின் அருகே மாமாற்று பாதை அமைத்தும், பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



