நாகர்கோவில் ஜூன் 2
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி ஆவார். அன்னாரின் 56 வது நினைவு ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திரு உருவ சிலைக்கு குமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வேப்பமூடு சந்திப்பில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



