நாகர்கோவில், டிச. 13 –
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாய்பாபா பக்தர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் இருந்து சென்னையை தவிர வேறு ஊர்களிலிருந்து நேர ரயில் சேவை கிடையாது.
கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு நேரடி ரயில் சேவை மிகவும் குறைவாக உள்ளது என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வாரம் 3 முறை ரயில், வாரணாசி வாராந்திர ரயில் என்று 2 ரயில்கள் மட்டுமே நேரடி தனி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் சென்னையிலிருந்து சீரடி சாய் நகருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். சென்னை நகரத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வாராந்திர ரயிலை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த திருப்பதி ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க தென் மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2 ரயிலையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு இருக்க போவதில்லை.
சென்னையில் இருந்து சீரடி சாய்நகருக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலை கன்னியாகுமரிவரை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயில் செவ்வாய்கிழமை நடு இரவு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை மதியம் 13.30 மணிக்கு ஜோலார்பேட்டை சென்டடைந்துவிடும். பின்னர் வியாழக்கிழமை காலை 10.50 மணிக்கு சீரடி சாய் நகர் சென்றடையும். வியாழக்கிழமை சாய்பாபா தரிசனத்தை தரிசித்து விட்டு அந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்துட்டு சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்து சேருமாறு கால அட்டவணை அமையும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது


