திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் 7ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாதம் பிரம்மோற்சவம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது
48 அடி உயரமும் 21 அகலமும் கொண்ட இத்தேரானது வண்ண மலர்கள் மற்றும் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக காட்சியளித்தது.
நகரின் முக்கிய மாட வீதிகளான குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜா வீதி, மோதிலால் தெரு வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் வீரராகப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் ராணிப்பேட்டை வேலூர் சென்னை காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் மிளகு உப்பு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது செலுத்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் டிஎஸ்பிக்கள் அசோகன், யோகேஸ்வரன் தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.