கன்னியாகுமரி, செப். 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் விளையாடும் காவலர்களை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தார்.
நேற்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் காவல் துறையை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட், கபடி, இறகு பந்து ஆகிய போட்டிகளில் அதிக அளவில் காவலர்கள் வெற்றி பெற்றனர். நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முழு ஒத்துழைப்பும் முயற்சியும் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என காவலர்கள் தெரிவித்தனர்.



