தருமபுரி, செப்டம்பர் 13 –
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரியப்பன், நரேஷ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர்கள் ரமேஷ், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
அதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி காணொலி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும்,
2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை பூத் வாரியாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்று சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், வக்கில் கோபால், பஞ்சபள்ளி அன்பழகன், கண்ணபெருமாள், ஆனந்தன், சரவணன், முத்துக்குமார், சந்திரமோகன், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், பி.கே. முரளி, வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர். மனோகரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



