தேனி, செப். 10 –
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது: செங்கோட்டையன் அவர்களின் எண்ணம் செயல் வெற்றியடைய வாழ்த்துகிறேன், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையனே என்னிடம் பேசி உள்ளார். தம்பிதுரை கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கடந்த மூன்று வருடங்களாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக்கொண்டு உள்ளேன்.
கலகம் ஒன்றிணைவதற்காக அதற்கான முழு முயற்சியாக செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ஏற்கனவே துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ஆர். ராதாகிருஷ்ணன் நல்லவர் எனவும், அனைத்திந்திய அண்ணா திராவிட கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் அவருக்கு வாக்களித்துள்ளார் எனவும், நைனார் நாகேந்திரன் நீங்கள் அழைத்தால் சந்திப்பேன் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, இதற்கு என் நம்பர் அவரிடம் உள்ளது என்று பதில் அளித்தார்.



