By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்குவாரி அனுமதி முறைகேடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்குவாரி அனுமதி முறைகேடு
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்குவாரி அனுமதி முறைகேடு

Last updated: August 23, 2024 3:38 pm
August 23, 2024 71 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 23

 

 அரசு விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட முந்தைய ஆட்சியா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அண்மையில் உத்தரவிட்டது மட்டுமல்லாமல்  மாவட்ட நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. 

 

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் வா்கிஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்  கல்குளம் வட்டம், கப்பியாறை கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அலுவலா்கள் எனக்கு அனுமதி அளித்தனா். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல் குவாரிகள் செயல்படுவதாக பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்கு தொடுத்தனா். இதை விசாரித்த நீதிமன்றம், கல் குவாரிகளை அலுவலா்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டது. இதில், எனது கல் குவாரி, குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 மீட்டருக்குள் இருப்பதாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட உரிமத்தை அலுவலா்கள் ரத்து செய்தனா். இந்த உத்தரவுக்குத் தடை விதித்து மீண்டும் கல் குவாரிக்கான உரிமத்தை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

 

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு கல் குவாரி உரிமச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருந்துள்ளன. எனவே, அங்கு கல் குவாரி தொடா்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்த அலுவலா்களின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

 

அதேநேரம், மனுதாரா் மீது எந்தத் தவறும் இல்லை, உண்மையை மறைக்கவும் இல்லை. கல் குவாரிக்காக இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருள்களை அவா் வாங்கியுள்ளாா். குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், அவருக்கு பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலா்கள் தவறு செய்ததால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது.எனவே, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இதை, தொடா்புடைய அலுவலா்களிடமிருந்து தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம்.

 

இந்த வழக்கில் தவறிழைத்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் இல்லாமல் அதிகாரிகள் பாா்த்து கொள்ள வேண்டும் என்றாா் நீதிபதி.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை

October 27, 2024 33 Views
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி 4 ம் வெள்ளிக்கிழமை
ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?